×

நாகை நீடாமடவிளாகம் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால் பெண்களிடம் துணிகர வழிப்பறி: நகராட்சி கவனிக்குமா?

நாகை: நாகை நீலா மடவிளாகம் பகுதியில் கடந்த சில தினங்களாக தெரு விளக்கு எரியாமல் இருப்பதை சீர் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை நீலா மடவிளாகம் பகுதி நகரின் மைய பகுதி ஆகும். இந்த பகுதியை இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். நகரின் மைய பகுதியில் இருப்பதால் பெண்கள் நீலாமடவிளாகம் பகுதி வழியாக எளிதில் தங்களது வீடுகளுக்கு செல்வார்கள்.

எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி வழியாக செல்வதற்கு அச்சம் அடைகின்றனர். இந்த சாலையில் ஒரு பகுதியில் மிகப்பெரிய குளம் உள்ளது. இதனால் சமூக விரோதிகள் எளிதாக வந்து பெண்களிடம் வழிப்பறி செய்யும் துணிகரமான செயலில் ஈடுபடுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் எரியாமல் இருக்கும் தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : area ,Naga Neetamadavalagam , Naga, Neeta Monastery, Street Lights, Track
× RELATED வாட்டி வதைக்கும்...