சென்னை: சென்னை அண்ணா நகரில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். கொளத்தூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கிஷோர் என்ற கல்லூரி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற டில்லிராஜ் என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.