திருத்தணி: திருத்தணி ஜோதி நகர் பகுதியில் ஏரி மதகு சேதம் அடைந்ததால் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரியை முறையாக பராமரிக்காததால் மதகு சேதமடைந்ததாக மக்கள் புகார் கூறியுள்ளார். மணல் மூட்டைகளை அடுக்கி ஏரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.