×

சாலையில் கிடந்த 6 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரர்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் போக்குவரத்து காவல்துறை வாகன டிரைவர் பாலாஜி. இவர், நேற்று முன்தினம் அப்பர்சாமி கோயில் தெருவில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவில் பர்ஸ்  ஒன்று கிடப்பது தெரிந்தது. அந்த பர்சை எடுத்து சோதனையிட்டபோது அதில் 6 ஆயிரம் இருந்தது.

மேலும், அந்த பர்சில் விசிட்டிங் கார்டு ஒன்று இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய சக்திவேல் என்பவர் அது தன்னுடைய பர்ஸ் தான் என்று தெரிவித்தார். அவரை திருவொற்றியூர் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அதில்,   திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பூ வியாபாரி சக்திவேல் (50), நேற்று முன்தினம் மாலை பைக்கில் சென்றபோது பர்ஸ்  தவறி விழுந்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் பர்சை ஒப்படைத்தனர்.

Tags : policeman ,road , policeman who handed over, 6 thousand belongings,road
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...