×

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணியை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு

சென்னை: மேற்கு சைதாப்பேட்டை 2வது தெருவை சேர்ந்த ரமேஷ் (39), நேற்று அதிகாலை 4 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்து, ரயிலுக்காக நடைமேடையில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர், திடீரென ரமேஷின் தலை மற்றும் காலில் கத்தியால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த 450 மற்றும் 6 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

ரமேஷ் அலறல் சத்தம் கேட்டு ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷை மீட்டு  சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.


Tags : railway station ,Saidapet , Passenger stabs, Saidapet railway station
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...