×

மதுரையில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

மதுரை: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் உதயராஜ் (29). எம்பிபிஎஸ் டாக்டரான  இவர்,  கடந்த மே மாதம் மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியலுக்கான பட்டமேற்படிப்பு துறையில் சேர்ந்தார். இதற்காக, மதிச்சயம் ராமராயர் மண்டபம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.  நேற்று காலையில் நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உதயராஜ் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிந்தது. அருகில் சிரிஞ்ச் கிடந்தது. தனக்குத் தானே விஷ ஊசி போட்டுக் கொண்டு, அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மதிச்சயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Doctor ,suicide ,Madurai , Madurai, poisoning, doctor suicide
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...