×

பச்சிளம் ஆண் குழந்தை காட்டில் மீட்பு: வீசிச்சென்றது யார்? போலீஸ் விசாரணை

ஊட்டி: ஊட்டி அருகே காட்டில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. அதை, வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஊட்டி மஞ்சனக்கொரையை சேர்ந்தவர்கள் சகாயமேரி, கீர்த்தி. இவர்கள் நேற்று, அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதிக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, துணியில் போர்த்தப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது.

குழந்தையை மீட்டு, ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் அறிவுறுத்தல்படி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தையை காட்டில் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து, ஊட்டி லவ்டேல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags : Jungle Rescuers: Who's Thrown Out , Baby, rescue
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...