நாகை: நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தெற்குபனையூர் கிராம நிர்வாக அலுவலர் விரக்குமார் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டு பட்டவை தனி பட்டாவாக மாற்றுவதற்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கியதாக விரக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.