×

டி.கே.சிவக்குமாரை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல்

புதுடெல்லி: டி.கே.சிவக்குமாரை மேலும் 5 நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல் செய்துள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 4 முதல் இன்று வரை டி.கே.சிவகுமாரை காவலில் வைத்து 10 நாட்கள் அமலாக்கப்பிரிவு விசாரித்தது. இதையடுத்து விசாரணைக்கு டி.கே.சிவக்குமார் ஒத்துழைக்கவில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு புகார் தெரிவித்துள்ளது. மேலும் டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.


Tags : DKC Sivakumar , Tikecivakkumar, Enforcement, filing, custody
× RELATED கட்சி மேலிடம் திடீர் முடிவு கர்நாடக...