சென்னை: அதிமுக பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிவாரணத் தொகையை தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து சுபஸ்ரீ வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.