சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர் வைக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று முத்தரசன் அறிவித்துள்ளார். பேனர் கலாச்சாரத்தால் வெளிநாடு செல்ல இருந்த தனது ஒரே மகளை இழந்துவிட்டதாக சுபஸ்ரீயின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுபஸ்ரீ தந்தையின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.