×

சுயநலம்மிக்க சமுதாயத்தில் ரூ 3 லட்சத்தை வீடு தேடி சென்று உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஷேர் ஆட்டோ டிரைவர்.. குவியும் பாராட்டுகள்

தி.மலை  : திருவண்ணாமலையில் நேர்மை உள்ளம் கொண்ட ஷேர் ஆட்டோ ஓட்டூநர் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பணத்தை தொலைத்தவரின் வீடு தேடி வந்து ஒப்படைத்துள்ளது அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இன்று காலை தனது தம்பியின் திருமணத்தை முடித்துக் கொண்டு, ஷேர் ஆட்டோவில் பயணி ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஷேர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட பயணியின் பையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்தது. ஆட்டோ பயணத்தை முடித்து விட்டு பணம் வைத்திருந்த பையை மறந்து வைத்து பயணி வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

சிறிது நேரத்திற்கு பின் ஆட்டோவில் அந்த பை இருப்பதை பார்த்த ஓட்டுநர், பயணியிடம்  அந்த பையை ஒப்படைக்க அவர் இறங்கிய இடத்திற்கே சென்றுள்ளார்.அவர் வீட்டை கண்டுபிடித்த ஆட்டோ டிரைவர், உரியவரிடம் பையை ஒப்படைத்தார். தொலைந்த பணம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர், ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த செய்தி அருகில் அப்பகுதி மக்களிடம் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. பலர் சமூகவலைதளங்களில் இந்த கதையை பகிர்ந்து ஆட்டோ டிரைவரை வாழ்த்தி வருகின்றனர். 


Tags : Thiruvannamalai, Share Auto, Otooner, Honesty, Appreciation
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...