வேலூர்: வேலூர் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மாமனாரை வெட்டி கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார். குடும்பத்தகராறு காரணமாக மாமனார் தங்கய்யாவை மருமகன் நல்லமணி வெட்டிக்கொன்றதாக தகவல் வெளிவந்துள்ளது. கொலை செய்த நல்லமணியை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.