சென்னை: பாரம்பரிய உணவுகளை தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அனைவருக்கும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை துவங்கி வைத்த பின் முதல்வர் இவ்வாறு உரையாற்றினார்.