×

ரயில் நிலையங்களில் திரிந்த ஆதரவற்றோர் 6 பேர் மீட்பு

ஆலந்தூர்: ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் 6 பேர் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை, கிண்டி, பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்களில் அழுக்கு உடைகளில் ஆதரவற்றோர் சுற்றித் திரிவதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த.  அதன்பேரில், பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அக்பர் அலி, எஸ்.ஐ. தனபால், தலைமை காவலர் ராஜரத்தினம் ஆகியோர் நேற்று மாலை மேற்கண்ட ரயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 6 பேரை மீட்டு, பரங்கிமலை பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்களை குளிக்க வைத்து, உணவு மற்றும் உடை வழங்கி, சென்னை ஓட்டேரியில் உள்ள  காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Tags : pilgrims ,railway stations , train ,stations, 6 orphans, rescued
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...