×

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி மூச்சுத்திணறி பரிதாப சாவு

சென்னை: மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் 268 பயணிகளுடன் நேற்று காலை 7.40 மணிக்கு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில், தான்சானியா நாட்டைச் சேர்ந்த செல்மன்ஜெனி (35) உள்பட 4 சுற்றுலா பயணிகளும்  அடங்குவர். அப்போது, செல்மன்ஜெனிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பணிப்பெண்களிடம் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணிக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி கூறினார்.

இதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் விமானம் காலை 7.36 மணிக்கு தரை இறங்கியது. மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் சென்று பயணியை சோதித்தேபாது அவர் மாரடைப்பால் இறந்து தெரிந்தது. இதையடுத்து அவரது உடல்,  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் 249 பயணிகளுடன் பகல் 12 மணிக்கு இரண்டரை மணி நேரம்  தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

Tags : Woman passenger ,death ,flight ,Chennai ,Muscat , Chennai ,Muscat, female passenger
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...