×

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் போலீஸ்காரரை தாக்கி சட்டை கிழிப்பு: போதை ஆசாமிகள் 2 பேர் சிறையிலடைப்பு

சென்னை: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 2 வாலிபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த  போலீஸ்காரர் சந்திரசேகர் என்பவர், போதை வாலிபர்களை எச்சரித்து, வீட்டுக்கு செல்லும்படி கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், போலீஸ்காரரை தாக்கி, அவரது சட்டையை கிழித்தனர். இதுகுறித்து போலீஸ்காரர் கொடுத்த தகவலனின் பேரில், அந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்துச் சென்று விசாரித்தனர். அதில், திருவொற்றியூர்  காலடிப்பேட்டை பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் பரத்பிரசாந்த் (20), மனோஜ் குமார் (21) என்பது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.„ தண்டையார்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் கஞ்சா விற்ற புதுவண்ணாரப்பேட்டை திடீர் நகரை சேர்ந்த உலகநாதன், தண்டையார்பேட்டை 7வது குறுக்கு தெருவை சேர்ந்த மாலதி (34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து,  அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

„ சேலையூர் பர்மா காலனியை சேர்ந்த கலியபெருமாள் (75), நேற்று காலை சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையை கடந்தபோது, பைக் மோதி இறந்தார். „ திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்த அருள் (55), சென்னை அண்ணா நகர் 12வது மெயின் ரோட்டில் வீடு எடுத்து தங்கி, அதே பகுதியில் சாலை ஓரமாக தையல் மெஷின் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம்  மாலை மெஷினை சார்ஜ் செய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தார்.„ செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே போதை பொருட்களை விற்ற செங்குன்றம் குமாரவேல் நகரை சேர்ந்த சங்கர் (51) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள போதை  பொருட்களை பறிமுதல் செய்தனர்.„ அம்பத்தூர் சிடிஎச் சாலை காமராஜர்புரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவரின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் நேற்று முன்தினம் மாயமானது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : policemen , knock, role, Police, shirt, jailed
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்