×

பெயின்ட் கடையில் தீ

திருவொற்றியூர்: பாரிமுனை ராசப்பா செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். மூன்று மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த பெயின்ட் கடையில் இரண்டாவது மாடியில் அட்டை  பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து ஐகோர்ட், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை  அணைத்தனர். அதற்குள் பெயின்ட் பொருட்கள் தீயில் கருகின.

Tags : paint shop , Fire , paint shop
× RELATED பெயிண்ட் கடையில் தீ விபத்து