×

பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து இன்று, நாளை மற்றும் 17, 20, 21, 24, 27, 28 மற்றும் அக்டோபர் 1, 4, 5, 8, 11, 12, 15, 18, 19 ஆகிய நாட்களில் காலை 9.32, 10.08, 10.56 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்  (எண்.40523, 40525, 40527) சிங்கபெருமாள்கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.மேற்கண்ட தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து காலை 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூரில் காலை 10.40க்கும்  சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் (எண்.40532, 40534, 40804) பகுதியாக குறைக்கப்பட்டு, சிங்கபெருமாள்கோவில்  ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 ஆகிய நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 10.20, 11 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்கள் கடற்கரை - சிங்கபெருமாள்கோவில் வரை இயக்கப்படும். முழுவதுமாக ரத்து: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து  பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில் (எண்.40536) இன்று முதல் அக்டோபர் 19ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து பிற்பகல்  1 மணிக்கு சென்னை கடற்கரை புறப்படும் (எண்.40632) ரயில் செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர் - சென்னை கடற்கரை வரை காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று முதல்  அக்டோபர் 19ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Southern Railway , maintenance work,underway, Rail Service,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...