×

இந்தியா-சீனா வீரர்கள் எல்லையில் வாக்குவாதம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் அருகே பான்காங் சோ லேக் பகுதி எல்லைக் கோடு குறித்து இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நேற்று கடும் வாக்குவாதம் நடந்தது. அப்பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய  ராணுவத்தினர் ரோந்து பணி மேற்கொள்ள சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், `எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி பற்றிய கருத்து  வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இந்த எல்லை விவகாரத்தில் தீர்வு காணப்பட்டது’ என்று தெரிவித்தனர்.



Tags : war ,border ,Indo-China , India-China,arguing, border
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...