×

அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர்.சுக்லபட்ச சதுர்த்தசியில் நிகழும் விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது அனந்த பத்மநாப சதுர்த்தசி விரதம். தெலுங்கில் பாத்ரபத மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியை அனந்த பத்மநாப சுவாமி விரதம் என அழைக்கின்றனர்.  ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.அதன்படி நேற்று அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி  சக்கரத்தாழ்வாருக்கு   தீர்த்தவாரி நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்தார். பின்னர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் தெப்பக்குளத்தில், சிறப்பு  தீர்த்தவாரி  நடைபெற்றது.



Tags : Anantha Padmanabha , Anantha Padmanabha, Chakkarattavar Tirthavari , Tirupati Ezumalayayan ,
× RELATED அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில்...