×

பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று தீவிரவாதிகள் கைது: காஷ்மீரில் பரபரப்பு

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜம்மு -பதன்கோட் நெடுஞ்சாலையில் நேற்று காலை 8 மணிக்கு டெம்போ வேன் ஒன்று நுழைந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். இந்த சோதனையின்போது வாகனத்தில்  இருந்து 6 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த டெம்போ பஞ்சாபின் பாம்யால் பகுதியில் இருந்து காஷ்மீர் செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்து  வருகின்றனர். மேலும், வாகனத்தில் இருந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டு உ0ள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள பாம்யால் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என  நம்பப்படுகிறது.



Tags : terrorists ,Kashmir , terrible, weapons,terrorists, arrested, Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...