×

பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

சென்னை: பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு இன்று, நாளை ஆகிய 2 நாட்களில் வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கும், திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.25 மணிக்கு வேலூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், திருவனந்தபுரம்-கிருஷ்ணராஜபுரம் இடையே சிறப்பு ரயில் இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Thiruvannamalai , Southern Railway
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...