×

கார்கள் மோதலில் 4 பேர் பலி

வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த மர வியாபாரிகள் மலைச்சாமி, பாண்டித்துரை. இவர்கள் டூவீலரில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர்மீடியனை தாண்டி எதிரே சென்ற  மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மலைச்சாமி, மற்றும் கார்களில் வந்த பெண் உள்பட 3 பேரும் இறந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.


Tags : car collision , Four killed ,car collision
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி