தனுஷ்கோடி: தனுஷ்கோடி கடலில் திடீரென சூறாவளி உருவாகி கடல் நீர் மேல்நோக்கி சுழன்று சென்றதால் பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர். நடுக்கடலுக்குமேல் பிரம்மாண்டமாக திரண்டு இருந்த மேகக்கூட்டத்தை நோக்கி கடல்நீர் கயிறு போல் சுருண்டு மேலே சென்றது. அருகருகே உருவான இரு சூறாவளிகளையும் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பார்த்து வியந்தனர்.