பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவில் சிக்னல் சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ரூ.10,000 அபராதம் விதித்ததை தட்டிக் கேட்ட பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் செய்த பொதுமக்களை தடியால் அடித்து பீகார் போலீஸ் கைது செய்துள்ளது.