சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மேலும் ஒரு பாம்பு பிடிப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. தலைமை செயலகத்தில் பழைய கட்டிடத்தில் நேற்று ஒரு பாம்பு பிடிப்பட்டது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகை முதல் மாடியில் மேலும் ஒரு பாம்பை இன்று தீயணைப்புத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்தினர்.