திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (33). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வகுமார் குடித்துவிட்டு தினமும் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து லட்சுமி எண்ணூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.