கோவை: வெளிநாடு பயணம் மூலம் ரூ.8,895 கோடி முதலீடு கிடைக்க உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 41 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.