சென்னை: சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.16 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து விஜயராகவன் என்பவர் கடத்தி வந்த 300 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, மலேசியாவில் இருந்து சென்னை வந்த லினா பிந்து என்பவரிடம் 582 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.