சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ரகுராஜ் என்பவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மண்ணடியில் ரூ.80 லட்சம் பணம்கொள்ளை போன வழக்கில் ரகுராஜை விசாரணைக்கு போலீசார் அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக ரகுராஜ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்ப்போது அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.