×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல்

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 வீட்டுக் காவலில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

கடந்த மாதம் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா, டெலிபோன் வசதி இல்லாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதேசமயம் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சம் தெரிவித்தது.

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா

இந்நிலையில், மதிமுக சார்பில் செப்.15ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னையில் நடை பெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். இதனிடையே பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் பரூக் அப்துல்லா வருகை குறித்து பேசிய வைகோ, மாநாட்டில் பங்கேற்க வருமாறு பரூக் அப்துல்லாவை அழைத்து இருந்தேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பரூக் என்னிடம் பேசினார். . 5ம் தேதி காஷ்மீரை சிதைத்து விட்டார்கள். அதன் பிறகு பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள இயலவில்லை, என்று கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து, வரும் 15ம் தேதி மதிமுக சார்பில் நடைபெற உள்ள மாநாட்டின் அழைப்பிதழில் ஃபரூக் அப்துல்லாவின் பெயர் இடம்பெற்றுள்ளது

ஆட்கொணர்வு மனுதாக்கல்

இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி எம்.பி. ஆன வைகோ மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு உள்ளது.

Tags : Vaiko ,Farooq Abdullah ,Supreme Court ,Kashmir , Appeal, Petition, Farooq Abdullah, Home Guard
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...