×

மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் : தொமுச அறிவிப்பு

சென்னை: தொமுச செயலாளர் ரத்தினசபாபதி வெளியிட்ட அறிக்கை: தமிழக மின்சாரவாரியத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதை உடனடியாக நிரப்பிட வேண்டும். திமுக ஆட்சியில் 73,600 ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பணிநிரந்தரம் செய்தது போல், தற்போது  பணியாற்றும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். இல்லையென்னால் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மின்வாரியத்தில் ஆட்கள்பற்றாக்குறை காரணமாக வேளைப்பளு காரணமாகவும் தொழிலாளர்கள்  விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கேங்மேன் பதவி புதிதாக உருவாக்குவது, தமிழக அரசும், மின்துறை அமைச்சரும் விரும்புவர்களை மின்வாரியத்தில் பணி அமர்த்திட திட்டமிடுவதாக தெரிகிறது. அதிமுக அரசு தனது கட்சிக்காரர்களை மின்வாரியத்தில் தேர்வு மூலம்  நுழைத்திட முயற்சிக்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Demonstration , Demonstration,vacancies, E-mail,Tumors
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்