×

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சேர்ந்த மூக்கையா மகன் மாரிமுத்து (29). டூவீலர் மெக்கானிக். இவர் பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இதனையடுத்து அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்த மாரிமுத்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் 28.10.2015ல் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மெக்கானிக் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் மாணவிக்கு கடந்த 11.1.2016ல் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. கோர்ட் உத்தரவின் பேரில் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதில் மாரிமுத்துதான் தந்தை என உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி குமார்சரவணன் விசாரித்து, மாணவியை பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Tags : Plus 2 student, rapist, mechanic, life sentence
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...