×

காதலன் பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த போது விபத்தில் சிக்கி இளம்பெண் பலி

பல்லாவரம்: பூந்தமல்லி, கரையான் சாவடியை சேர்ந்தவர் அண்ணாமலை (21). பட்டதாரி. இவர், குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அபிநயா (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். நேற்று அண்ணாமலை, தனது காதலியை சந்திப்பதற்காக குன்றத்தூர் வந்துள்ளார். அப்போது தனக்கு பைக் ஓட்ட கற்றுத்தருமாறு அபிநயா கேட்டுள்ளார். எனவே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கின் பின்னால் அண்ணாமலை அமர்ந்து கொண்டு அபிநயாவுக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தார்.

சிக்கராயபுரம் கல்குவாரி அருகே வந்தபோது திடீரென தறிகெட்டு ஓடி சாலையோரமுள்ள இரும்பு தடுப்பில், பைக் பலமாக மோதியது.
இதில் அபிநயாவின் கழுத்து கம்பியில் அறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே தனது காதலன் கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பைக்கின் பின்னால் இருந்த காதலன் அண்ணாமலை படுகாயமடைந்து வலியால் அலறி துடித்தார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து அபிநயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த அண்ணாமலையை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Teenager , Teenager riding , bike kills teenager
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை