சென்னை: 2015 உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.62,378 கோடி முதலீடு மட்டுமே வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது. 2015 உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2.42 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாக தமிழக அரசு கூறி வந்தது.