×

புகழேந்தி வீடியோ தொடர்பாக நன்கு விசாரித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்: டி.டி.வி.தினகரன் பேட்டி

திருச்சி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து புகழேந்தி நீக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை உறுதி செய்யும் வகையில், டிடிவி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இந்த ஆலோசனையானது நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், அ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அ.ம.மு.க.வில் இருந்து சிலர் விலகி செல்கிறார்கள். அவர்கள் சொந்த விருப்பத்திற்காகவும், சுயநலத்துக்காகவும் செல்கிறார்கள். அதை நான் துரோகம் என்று சொல்லமாட்டேன். புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. அதுபற்றி நன்கு விசாரித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நடக்கும் சம்பவங்களை ஊடகங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார். முன்னதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் டிடிவி.தினகரன் குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி பேசும் வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டு சமூவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், 14 ஆண்டுகள் முகவரி இல்லாமல் இருந்த டி.டி.வி.தினகரனை நான் தான் அடையாளம் காட்டினேன் என்றும், ஜெயலலிதா இறந்தபோது கூட அவர் அங்கு இல்லை என்றும் புகழேந்தி அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த புகழேந்தி, அமமுகவில், தன்னை வேண்டுமென்றே அசிங்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்த டிடிவி.தினகரன், தற்போது ஓரிரு நாளில் யார் தவறு செய்தார்கள் என்று தெரியவரும் என்று கூறியுள்ளார்.


Tags : DDV Dinakaran , Pugazhenthi, video, AMMK, TTV Dinakaran
× RELATED போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு...