திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மயிலம் அடுத்த பொம்பூர் கோயில் திருவிழாவில் இருதரப்பு மோதலில் கரும்பு வயல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். திருவிழாவின் போது ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவினர் பட்டாசு வெடித்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.