கும்பகோணம்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் 2008ல் 6 ஐம்பொன் சிலைகளை அப்போதைய அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்து, விற்பனை செய்து விட்டனர். இது தொடர்பாக சென்னையில் ஏட்டு சுப்புராஜை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்ற காதர்பாட்சாவும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். காதர்பாட்சாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி மாதவராமானுஜம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.