×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படியான நபர் ஒருவர், தப்பியோட முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், விழுப்புரம்  மாவட்டத்தை சேர்ந்த கணபதி (21) என்பதும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கும் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடிவந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.„  நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சேகர் (54) நேற்று பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்றபோது, தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலே இறந்தார். „ திருவல்லிக்கேணி பல்லவன் சாலை எஸ்.எம். நகரை சேர்ந்த மணிகண்டன் (29), ேநற்று முன்தினம் இரவு குடிபோதையில் எதிர் வீட்டின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இதை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் ராக்கி (24) தகராறில் ஈடுபட்டு,  மணிகண்டன் மண்டையை உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். „  புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை கதவின் பூட்டை உடைத்து, புதிய லேப்டாப், மோடம், ₹3000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

„  திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்த பூங்காவனம் (65), நேற்று முன்தினம் எல்லையம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே ஷேர் ஆட்டோவில் சென்றபோது, அவர் அணிந்திருந்த 9 சவரன் செயினை நூதன முறையில் அபேஸ்  செய்துகொண்டு தப்பிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். „  கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த சரவணன் (21), ஆவடியை சேர்ந்த சிவபாலன் (23), புளியந்தோப்பு பாண்டியன் (24) ஆகியோரை போலீசார் கைது  செய்தனர்.„ மாதவரம் பால் பண்ணை காலனியை சேர்ந்த பொன்னா ஆதித்யா (18) என்ற மாணவி, நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் பஸ் நிலையம் வழியாக நடந்து சென்றபோது, அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற அரும்பாக்கத்தை  சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.„  புழல் கன்னடபாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), நேற்று மாலை காவாங்கரை ஜி.என்.டி சாலையில் பைக்கில் சென்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இறந்தார்.„ எர்ணாவூர் ெஜ.ஜெ நகரை சேர்ந்தவர் தாஸ் (33). இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில், அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags : Cell phone passenger ,passengers , Coimbatore, Bus Stand,arrested , cell phone, theft
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...