×

இல்லற வாழ்க்கைக்கு இடையூறு கழுத்தை நெரித்து பெண் குழந்தை கொலை

* தாய், 2வது கணவனிடம் விசாரணை ˜ * புழல் அருகே பயங்கரம்

புழல்: புழல் அருகே இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த தாய் மற்றும் 2வது கணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (27). இவரது மனைவி பவானி (24). இவர்களது மகள் யாழினி (3), மகன் ராஜேஷ் (1). கடந்த 4 மாதங்களுக்கு முன் ராஜேஷுக்கும், பவானிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும்  விவாகரத்து பெற்றனர். இதன்பிறகு, புழல், கண்ணப்பசாமி நகர், 14வது தெருவில் 2 குழந்தைகளுடன் பவானி தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், பவானி கொடுங்கையூரை சேர்ந்த ஆசிப் (25) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 7ம் தேதி குழந்தை யாழினி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதாக ரமேஷுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து  ரமேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துவிட்டு சென்றார்.

இதன்பிறகு புழல் போலீசில், தனது மகள் யாழினி சாவில் மர்மம் உள்ளதாக ரமேஷ் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் யாழினியின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுபற்றி பவானியிடம் விசாரித்தபோது, “இல்லற வாழ்வுக்கு யாழினி இடையூறாக இருப்பதாக ஆசிப் அடிக்கடி கூறுவார்” என்று தெரிவித்தார்.இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை யாழினி கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து, பவானி மற்றும் 2வது கணவன் ஆசிப் ஆகியோரை  பிடித்து விசாரித்து வருகின்றனர்.



Tags : death , Disruption , life, Woman strangled ,death
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...