×

செலவுக்கு பணம் தராததால் தாயை கொலை செய்த மகன்

திருப்பூர்: திருப்பூர் மணியகாரம்பாளையம் ரோடு, காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (47). இவரது கணவர் மகேஷ் கடந்த 4 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.  2 மகள் மற்றும் ஹர்சித் (22) (சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்) என்ற மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் 2ம் மகள் கோவையில் தங்கி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆரோக்கியமேரி தனது வீட்டிற்கு கீழ் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், ஹர்சித் அடிக்கடி ஆரோக்கியமேரியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் ஆரோக்கியமேரியை கத்தியால் குத்தி ஹர்சித் கொலை செய்துள்ளார். ஹர்சித்தை  போலீசார் கைது செய்தனர்.


Tags : Son who killed , mother,not paying the cost
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...