மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கைதான ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர், ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனு குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 16க்கு தள்ளி வைத்தார்.