சென்னை: 20 லிட்டர் தண்ணீர் கேனை பெண்களால் தூக்கி கையாள முடியவில்லை என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தண்ணீர் கேனின் அளவை குறைக்க உத்தரவிடுமாறு திபாஸ்ரீ என்பவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். திபாஸ்ரீயின் வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது. மனுதாரர் நினைக்கும் உத்தரவுகளை பெற உயர்நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.