×

தமிழகத்தின் 4 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள்: அமைச்சர் சரோஜா

சென்னை : உலக வங்கியுடன் இணைந்து தமிழகத்தின் 4 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதிகளை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் 28கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஏக்கர் நிலப்பரப்பில்  உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது பெரும்பாலும் பணிபுரியும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முன்மாதிரியான பெண்கள் தங்கும் உலகத்தரம் வாய்ந்த விடுதிகளை அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தங்கள் துறைக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் அறநிலையத்துறையில் இருக்கின்ற 6 ஏக்கர் நிலத்தில் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

Tags : women ,Saroja ,places ,hostels ,Tamil Nadu , World class, women, lodging, hotels
× RELATED வேலூர் குடியாத்தம் அருகே வேப்பூர்...