திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆரணியில் போலீசார் அலைக்கழிப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தை வழக்கு காரணமாக போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. வாகனத்தை திருப்பித்தரக்கோரி சென்ற கோபாலகிருஷ்ணனை போலீஸ் அலைக்கழிப்பதை கண்டித்து காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.