×

ஓசூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி, 2 பேர் படுகாயம்

ஓசூர்: ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை அடுத்த நெருப்பு குட்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசன், சதீஸ் ஆகியோர் கெலமங்கலம் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி தனது மனைவி முனிரத்னத்துடன் சின்னலட்சுமணன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து வரகனப்பள்ளி என்ற இடத்தில் வளைவில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் வேகமாக மோதி விபத்துள்ளது. இதில் வாகனங்களை ஓட்டி வந்த தமிழரசன், சின்னலட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த சதீஷுக்கு கால் முறிவு ஏற்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையிலும், முனிரத்னம் என்பவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தன்னப்பள்ளி காவல்துறையினர் உயிரிழந்த இருவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Hosur , Hosur, two wheeler, accident, two killed, 2 injured
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ