×

காரில் சென்ற தொழிலதிபரிடம் பணம் பறித்த 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னை பழைய ஜெயில் ரோட்டை சேர்ந்தவர் நந்தகோபால். தொழிலதிபரான இவர் கடந்த 6ம் தேதி இரவு நண்பர்களுடன் கோவளம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். தேனாம்பேட்டை அருகே வந்த போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், காரை வழிமறிந்து நாங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறி காரை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர். காரில் சோதனை செய்த 2 பேரும் நந்தகோபாலை மிரட்டி, அவர் வைத்திருந்த விலையுயர்ந்த 2 செல்போன்கள், ₹13 ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர்.  

 இதுகுறித்து நந்தகோபால் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அண்ணா சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.அப்போது அடிதடி, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளான மணிகண்டன்(25), கோகுல்(22) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 ஆயிரம், 2 செல்போன்கள், வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : businessman , businessman, car, 2 raped ,robbers ,arrested
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்