×

முதுமலை புலிகள் காப்பகத்தில் பாகன்களை தாக்க முயன்ற கும்கி யானையால் பரபரப்பு

கூடலூர்:   நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கும்கி யானைகள் உள்ளிட்ட 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஜான்  என்ற கும்கி யானைக்கு மஸ்து ஏற்பட்டுள்ளது. இந்த காலங்களில் யானையை கட்டி வைத்து பராமரிப்பது வழக்கம். இதனால் ஜான் யானையை கட்டி வைப்பதற்கு மாறன் (32) உட்பட 3 பாகன்கள் நெருங்கிய போது அது தாக்க முயன்றது. அவர்களை யானை விரட்டியதால் திகிலடைந்தனர்.  உடனே அதை கட்டுப்படுத்துவதற்காக பாகன்கள்  கையில் கிடைத்த கற்கள் உள்ளிட்ட பொருட்களால் யானையைத் தாக்கி கட்டுப்படுத்தினர். பின்னர் இந்த யானை கட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘யானைகளுக்கு மஸ்து ஏற்படும்போது அவை திடீரென பாகன்களையே முதலில் தாக்கும். இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சேரன் என்ற யானைக்கு மஸ்து ஏற்பட்டு அதன் பாகன் ரவி (30)  என்பவரை தாக்கி கால் முறிந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த யானையும் பாகன்களை தாக்கி இருக்கக்கூடும். எனவே மஸ்து ஏற்படும் யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் யானைகளிடம் சற்று கடுமையாக  நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாக உள்ளது,’’ என்றனர்.

Tags : Kumki ,pagans , Mudumalai, Tiger Archive,pagans, ,Kumki Elephant
× RELATED டி.வி நடிகர் ஹீரோவாக அறிமுகமாகும் தூக்குதுரை