×

டோரியான் புயலால் சீர்குலைந்துள்ள பஹாமாஸ் தீவுக்கு நிதி உதவி வழங்க தயார்: இந்திய அரசு அறிவிப்பு...!

பஹாமாஸ்: டோரியான் புயலால் சீர்குலைந்துள்ள பஹாமாஸ் தீவுக்கு நிதி உதவி வழங்கத் தயார் என இந்திய அரசு அறிவித்துள்ளது. கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமாஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் தாக்கிதுயுள்ளது. இதில் பெரும் சேதம் பஹாமா தீவுகளுக்கு ஏற்பட்டுள்ளது. டோரியன் புயல் புரட்டிப் போட்ட பஹாமாஸ் தீவில் 43 பேர் உயிரிழந்தனர். கட்டிடங்களும் வாகனங்களும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிந்துள்ளன. 7 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு மருத்துவம் மற்றும் நீர், உணவுப் பற்றாக்குறை உள்ளதால் பஹாமா நாட்டுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையில் கேட்டுக்கொண்டுள்ளது.

பஹாமா பிரதமர் ஹுமர்ட் மின்னிஸ் கூறும்போது, நாங்கள் வரலாற்றுப் பேரழிவால் உண்டான சோகத்தில் உள்ளோம் நாட்டில் 60% இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வெளிறவுத்துறை சார்பில் ரவீஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டோரியன் புயலால் பஹாமாஸ் தீவில் மிகப்பெரியளவில் சேதம் ஏற்பட்டிருப்பதை அறிந்து சோகம் அடைந்துள்ளதாகவும், தோழமை பாராட்டும் பஹாமாஸ் மக்களுக்கு இந்த கடின நேரத் துயரில் பங்கெடுத்துக் கொள்வதோடு, இந்திய அரசு 1 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 16 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் நிதியை பேரிடர் மீட்பாக வழங்கத்தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை மதியம் பஹாமா நாட்டைக் கடந்த டோரியான் புயல் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புளோரிடா, கரோலினா மாகாண ஆளுநர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே இது தொடர்பான பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Tags : island ,government ,Bahamas ,Hurricane Dorian ,Indian , Dorian Storm, Bahamas Island, Finance, Government of India
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...